"கொரோனா பரிசோதனை முடிவில் குளறுபடி" - சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, கொரோனா பாதிப்பு இல்லாதவருக்கு தொற்று இருப்பதாக அறிவித்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
கொரோனா பரிசோதனை முடிவில் குளறுபடி - சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
x
திருச்சி மாவட்டம் முசிறி அருகே, கொரோனா பாதிப்பு இல்லாதவருக்கு தொற்று இருப்பதாக அறிவித்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். முசிறி அருகேயுள்ள சொரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி, சுகாதார துறையினர் மருத்துவமனைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், தனியார் மையத்தில் பரிசோதனை செய்ததில், அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. இதை கண்டித்து சொரியம்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த அதிகாரிகள், பொதுமக்களை சமாதானம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்