ஆட்டோ: கார் நேருக்கு நேர் மோதல் - சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு
தேனி மாவட்டம், போடி அருகே நிகழ்ந்த கொடூர விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
போடி - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவும், காரும் நேருக்குநேர் மோதி விபத்தில் சிக்கியது. இதில், ஆட்டோவில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். புதூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் யோகேஸ்வரன் மற்றும் அரவிந்த் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், பின்னர், அங்கு வந்த குரங்கணி காவல்துறையினர் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, போடி அரசு மருத்துவமனைக்கு அனுமதி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story