தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு
x
தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 5 மாவட்டங்களின் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில், 2 ஆயிரத்து 482 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 853 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 18 ஆயிரத்து 673 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.செங்கல்பட்டில் புதிதாக 771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து 310 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 643 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.செங்கல்பட்டுக்கு அடுத்து, கோவையில் மேலும் 504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவில் இருந்து 369 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 520 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
திருவள்ளூரில் புதிதாக 285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவில் இருந்து மேலும் 149 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆயிரத்து 974 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மதுரையில் புதிதாக 254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 91 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆயிரத்து 496 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  
 

Next Story

மேலும் செய்திகள்