14 மீனவர்களுடன் சென்ற விசைப்படகு : கப்பல் மீது மோதி விபத்து - தமிழக மீனவர்களின் நிலை என்ன?

கேரளாவிலிருந்து தமிழக மீனவர்கள் உள்பட 14 பேருடன் சென்ற படகு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.
14 மீனவர்களுடன் சென்ற விசைப்படகு : கப்பல் மீது மோதி விபத்து - தமிழக மீனவர்களின் நிலை என்ன?
x
கேரளாவிலிருந்து தமிழக மீனவர்கள் உள்பட 14 பேருடன்  சென்ற படகு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3  மீனவர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வேப்பூர் பகுதியில் இருந்து ஜாபர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 14 மீனவர்கள் கடந்த ஞாயிறு அன்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதில் கன்னியாகுமரி குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் அடக்கம். விசைப்படகு கர்நாடக கேரள எல்லையான மங்களூரில் இருந்து 55 கடல்மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது கொரியாவை சேர்ந்த ஏபிஎல் ஹாவ்ரே என்ற கப்பல் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 3 மீனவர்கள் உயிரிழந்ததாகவும், 6 மீனவர்கள் மீட்கப்பட்டதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 5 மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்