திருவண்ணாமலை : ரூ. 2 கோடி பறிமுதல் பறக்கும் படையினர் - ரூ. 1.61 கோடி திரும்ப ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த 2 கோடியே 29 லட்சம் ரூபாயில், உரிய ஆவணங்கள் சமர்பித்தவர்களிடம் 1 கோடியே 61 லட்சம் ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
திருவண்ணாமலை : ரூ. 2 கோடி பறிமுதல்  பறக்கும் படையினர் - ரூ. 1.61 கோடி திரும்ப ஒப்படைப்பு
x
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த 2 கோடியே 29 லட்சம் ரூபாயில், உரிய ஆவணங்கள் சமர்பித்தவர்களிடம் 1 கோடியே 61 லட்சம் ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி கடந்த மார்ச் மாதம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 218 நபர்களிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட 2 கோடியே 29 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் கைபற்றப்பட்டது. தற்போது வாக்குப்பதிவு முடிந்த நிலையில், உரிய ஆவணங்களை சமர்பித்தவர்களிடம் 1 கோடியே 61 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 68 லட்சத்து 17 ஆயிரத்து 690 ரூபாய் பணமும், 1 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள  பரிசு பொருட்களும் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டது.




Next Story

மேலும் செய்திகள்