தமிழகத்தில் 6,618 பேருக்கு கொரோனா - அதிகபட்சமாக சென்னையில் 2,124 பேர் பாதிப்பு

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 5 மாவட்டங்களின் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்..
x
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில், 2 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2 லட்சத்து 65 ஆயிரத்து 126 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 606 பேர் குணமடைந்துள்ள நிலையில், மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் புதிதாக 631 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 60 ஆயிரத்து 792 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 307 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டுக்கு  அடுத்து, கோவையில் மேலும் 617 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 63 ஆயிரத்து 197 ஆக உள்ள நிலையில், ஒரே நாளில் 248 பேர் குணமடைந்துள்ளனர். திருவள்ளூரில் மேலும் 296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 48 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 155 பேர் குணமடைந்துள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் புதிதாக 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது. மதுரையிலும் ஒரே நாளில் 86 பேர் குணமடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்