குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
தெற்கு மூணாண்டிபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு, வடக்கு மூணாண்டிபட்டியை சேர்ந்த ஜெயப்பிரியா என்ற பெணணுக்கும் இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமண நாள்முதலே இருவரிடையே சண்டை ஏற்பட, ஜெயப்பிரியா கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதுவரை, ஜெயப்பிரியா குறித்த தகவல் இல்லாததால், இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு கைகலப்பாக மாற ஜெயப்பிரியாவின் தந்தை மற்றும் சகோதரர் சேர்ந்து, ராஜ்குமாரின் குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாள் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வழக்குப்பதிந்தி போலீசாா, 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story