முறையற்ற உறவால் நடந்த விபரீதம் - கள்ளக்காதலி தீ வைத்து எரித்துக் கொலை

திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த 2 பேருக்கு இடையே நடந்த பிரச்சினை அவர்களின் உயிரை கொடூரமாக பறித்திருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம்....
முறையற்ற உறவால் நடந்த விபரீதம் - கள்ளக்காதலி தீ வைத்து எரித்துக் கொலை
x
சென்னை கோயம்பேடு பகுதியில் சாலையோரம் வசித்து வந்தவர் சாந்தி. 46 வயதான இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனியார் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். திருமணமான இவர் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து தன் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன், மனைவி போல வசித்து வந்ததாக தெரிகிறது. 
ஆனால் கோயம்பேட்டில் கூலி வேலை பார்த்து வந்த 48 வயதான முத்து என்பவருடன் 3வதாக சாந்திக்கு பழக்கம் ஏற்படவே அது ஒரு கட்டத்தில் தகாத உறவாக தொடர்ந்துள்ளது. முத்துவுடன் நெருங்கிப் பழகி வந்த சாந்தி திடீரென தன் 2வது கணவருடனும் உறவை தொடரவே, ஆத்திரமடைந்துள்ளார் முத்து. 
இதனை பலமுறை முத்து கண்டித்து வந்ததாகவும் தெரிகிறது. ஆனால் சாந்தி அதனை பொருட்படுத்தாததால் இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினையும் இருந்துள்ளது. இதனால் முத்துவை விட்டு விலகி இருக்கிறார் சாந்தி. காதலி தன்னை விட்டு பிரிந்த ஆத்திரத்தில் இருந்த முத்து சம்பவத்தன்று சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த சாந்தியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் விளிம்பிற்கு சென்ற முத்து தான் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து சாந்தியின் மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் சாந்தியை கட்டி அணைத்ததில் முத்துவுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் 2 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 2 பேரும் பலியாகினர். இவர்களின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்