ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
x
நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ்   சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர்  மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வத்திராயிருப்பை சேர்ந்த  மாதவராவ் போட்டியிட்டார். வேட்பு  மனு தாக்கல் செய்யப்பட்டு  இரண்டு நாட்கள்  மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில்  நுரையீரல் தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாதவராவுக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாக  கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மாதவராவ் உயிரிழந்தார். 


Next Story

மேலும் செய்திகள்