சாட்டிலைட் போன் கட்டணம் உயர்வு - ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் அவதி

சாட்டிலைட் போனுக்கான கட்டணம் உயர்ந்துள்ளதால், ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
சாட்டிலைட் போன் கட்டணம் உயர்வு - ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் அவதி
x
சாட்டிலைட் போனுக்கான கட்டணம் உயர்ந்துள்ளதால், ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கும் போது இயற்கை பேரிடர் குறித்த தகவல்களை பெற ஏதுவாக, கன்னியாகுமரி மீனவர்களுக்கு அரசு சார்பில் சாட்டிலைட் போன் வழங்கப்பட்டது. அதற்கு ரீ-சார்ஜ் செய்ய ஆண்டுக்கு 12 ஆயிரத்து 981 ரூபாய் மீனவர்கள் செலுத்தி வந்தனர். இதனிடையே, சாட்டிலைட் போனுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஆழ்கடலுக்கு செல்லும்போது சாட்டிலைட் போன் அவசியம் என்பதால், அதை தவிர்க்க முடியாத நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்