அதிகரிக்கும் கொரோனா- படுக்கை வசதி தயார்

சென்னையில் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படுக்கை வசதிகளை மீண்டும் அதிகரிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா- படுக்கை வசதி தயார்
x
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கிண்டி கிங்ஸ் அரசு கொரோனா மருத்துவமனையில் தலா 750 படுக்கைகள் உள்ளன. இந்நிலையில் படுக்கைகள் முழுமையாக நிரம்பும் சூழல் நிலவுவதால், கொரோனோ தொற்றிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை பொருத்து புதிய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 
இதைப் போல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆயிரத்து 900 படுக்கைகளும்,  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆயிரத்து 200 படுக்கைகளும் , கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 220 படுக்கைகளும் உள்ளன.  அத்திப்பட்டு பகுதியில் 4 ஆயிரத்து 800 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டுள்ளது.  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ள அண்ணாநகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 100 படுக்கைகளும், கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 100 படுக்கைகளும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்