மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுதாய் மீது வழக்கு பதிவு

திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுதாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுதாய் மீது வழக்கு பதிவு
x
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட மேல அனுப்பானடி பகுதியில் நேற்று முன்தினம் டோக்கன் மூலம் அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து மேல அனுப்பானடி ஏ.பி.டி. துரைராஜ் பள்ளி முன் தி.மு.க.வினர் திரண்டனர். டோக்கன் வழங்கியவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுத்தாய் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துணை ஆணையர் சமரசத்தை அடுத்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், நேற்று  சாலை மறியலில் ஈடுபட்டதாக தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பொன்னுத்தாயி   உட்பட 20 பேர் மீது அவனியாபுரம் போலீசார் 2 பிரிகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்