மத்திய அரசின் பிடிவாத போக்கு "நாடு பேரழிவை சந்திக்க இருக்கிறது" - ப. சிதம்பரம் எச்சரிக்கை

மத்திய பாஜக அரசின் பிடிவாத போக்கு காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் பிடிவாத போக்கு நாடு பேரழிவை சந்திக்க இருக்கிறது - ப. சிதம்பரம் எச்சரிக்கை
x
மத்திய பாஜக அரசின் பிடிவாத போக்கு காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சர்வதேச அளவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என, இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தி வரும் நிலையில், அதை மத்திய அரசு நிராகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றார். மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள சிதம்பரம், பேரழிவை நாடு சந்திக்க இருப்பதாக எச்சரித்துள்ளார். மேலும், மோடி அரசை போல், ஜனநாயக விரோத அரசு உலகில் இல்லை என, குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்