4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு
x
தமிழகத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 11 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 12 ஆயிரத்து 821 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது 27 ஆயிரத்து 743 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் இதுவரை 15 பேருக்கு உருமாறிய கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 556 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். செங்கல்பட்டில் 390 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் 332 பேரும், திருவள்ளூரில் 208 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்