திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருக்கும் மையங்களை கவனமாக பாதுகாத்திட வேண்டும் என திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...
x
வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருக்கும் மையங்களை கவனமாக பாதுகாத்திட வேண்டும் என திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகார துஷ்பிரயோகத்தையும், அராஜகத்தையும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் துணிச்சலுடன் எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழக மக்களுக்கு ஒரு சிறு இடைஞ்சலும் ஏற்படாமல் அமைதியான தேர்தலுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வழிவகுத்ததாக கூறியுள்ளார்.வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களை மே 2-ஆம் தேதி வரை கவனமாகப் பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர்,அங்கு பணியிலிருப்போர் தவிர வெளியாட்களின் நடமாட்டங்கள் உள்ளதா என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுத்தியுள்ளார்.வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் சுழற்சி முறையில் இரவு பகலாக, தொய்வின்றி பாதுகாத்திட வேண்டும் என்றும் திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்