அண்ணா பல்கலை. முறைகேடு புகார் : "ஒரு சில நாட்களில் சூரப்பாவுக்கு நோட்டீஸ்" - நீதிபதி கலையரசன் குழு

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் பதவி காலம் வரும் 11 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஒரு சில நாட்களில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என விசாரணை குழு தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலை. முறைகேடு புகார் : ஒரு சில நாட்களில் சூரப்பாவுக்கு நோட்டீஸ் - நீதிபதி கலையரசன் குழு
x
அண்ணா பல்கலைக்கழகத்தில் 280 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த‌து. இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவினர் 4 மாதங்களுக்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை துணைவேந்தரை தவிர்த்து மற்ற அனைவரிடமும் நேரில் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சூரப்பாவின் பதவிகாலம் வரும் 11 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதற்கு முன்னதாகவே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. நோட்டீசுக்கு சூரப்பா அளிக்கும் பதிலைப் பொறுத்து, அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என விசாரணை குழு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்