பாமக வேட்பாளரின் சின்னம் மறைப்பு என புகார் - மறுதேர்தல் நடத்த வேட்பாளர் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துபட்டி அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளரின் சின்னம் மறைக்கபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
x
திண்டுக்கல் மாவட்டம்  தர்மத்துபட்டி அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளரின் சின்னம் மறைக்கபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுரக்காய் பட்டியில் வாக்குச்சாவடி எண் 148-ல் பாமக வேட்பாளர் திலகபாமா  சின்னமும் வேட்பாளரின் பெயர் மற்றும் அவருடைய புகைப்படம், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவிடப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்றது. ஓட்டு பதிவு செய்ய வந்த வாக்காளர்கள், பாமக வேட்பாளர் உடைய சின்னத்தை  சேதப்படுத்தியதாகவும்,அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த வாக்கு சாவடியில் மறு தேர்தல் நடத்த பா.ம.க.,வேட்பாளர் திலகபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்