சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 மையங்களில் வைப்பு

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு, பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன.
x
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு, பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன. சேப்பாக்கம்- திருவில்லிக்கேணி தொகுதி,  துறைமுகம்,ஆர்கே நகர்,திருவிக நகர்,ராயபுரம் உள்ளிட்ட 5 தொகுதிகளின் வாக்குப்பெட்டிகள், ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம, ஆயிரம் விளக்கு, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. விருகம்பாக்கம் தொகுதி,  சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்குப்பெட்டிகள், அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்கு இயந்திரங்களும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் பார்வையில் அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், மூன்று அடுக்கு போலீஸ் மற்றும் துணை ராணுவப் படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்