கொரோனா சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலி... ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?
சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 3 கொரனோ நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது
சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 3 கொரனோ நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது,. நேற்று இரவு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த அறைகளில் உள்ள குழாய்களில் ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது,. அதனை தமிழக சுகாதாரத்துறை முழுமையாக மறுத்துள்ளது,. உயிரிழந்தவர்களில் 2 பேர் ஏற்கனவே பல்வேறு உடல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருந்தாகவும் சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்
Next Story