மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் காட்டுத் தீ

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்,100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில், காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் காட்டுத் தீ
x
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்,100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில், காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. சோத்துபாறை அணை பகுதியில் உள்ள சினூர், பெரியூர் வனப்பகுதியில் காட்டு தீ எரிந்து வருகிறது. வேகமாக பரவும் தீயில், அங்குள்ள, விலை உயர்ந்த மரங்களும், அரியவகை மூலிகை செடிகளும் எரிந்து கருகி வருகிறது. காட்டு தீயால், வன விலங்குகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனக்காவலர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக தேனி வனச்சரக அதிகாரி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்