அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.3.5 லட்சம் - பறக்கும் படை பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சென்னப்பநாயக்கனூரில் அதிமுக பிரமுகர் ஒருவர் வாக்குக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிமுக பிரமுகரான ராமு என்பவரது வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதில் முதல்முறை நடந்த சோதனையில் 2 லட்சத்து 33 ஆயிரம், இரண்டாம்கட்ட சோதனையில் 1 லட்சத்து 20 ஆயிரம் என மொத்தம் 3 லட்சத்து 53 ஆயிரத்து 800 ரூபாய் பணம் பறிமுதல செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஊத்தங்கரை தேர்தல் அலுவலர் சேது ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story