சிறு தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன; பொதுத்துறை தனியாருக்கு தாரை வார்ப்பு - சீதாராம் யெச்சூரி

தமிழகம் பாதுகாக்கப்பட ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறு தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன; பொதுத்துறை தனியாருக்கு தாரை வார்ப்பு - சீதாராம் யெச்சூரி
x
தமிழகம் பாதுகாக்கப்பட ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாகை மாவட்டம் திருக்குவளையில், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலியை ஆதரித்து, சீதாராம் யெச்சூரி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை பாதுகாக்க ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என, கேட்டுக் கொண்டார். ஸ்டாலின் முதல்வரானவுடன், வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேசிய அவர்,  பொது துறைகள் அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு, சிறு தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். 
கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு சென்ற பாக்கியம் இன்று திருக்குவளையில் கிடைத்தது என்று கூறிய சீதாராம் யெச்சூரி, மனித தன்மை அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதை கருணாநிதியிடம் கற்றுக்கொண்டேன் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்