பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஆவார் - கிஷண் ரெட்டி தகவல்

பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஆவார் என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஆவார் - கிஷண் ரெட்டி தகவல்
x
பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஆவார் என, மத்திய உள்துறை இணை அமைச்சர்  கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். 

வரும் ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதுகுறித்த ஏற்பாடுகளை பார்வையிட வந்த மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிலையான ஊழல் இல்லாத அரசு தேவை என்றும், அமைதியான வாழ்க்கை தொடர அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப ஆட்சி தொடரும் என்றும், நில அபகரிப்பு தொடரும் என்றும் கூறினார். 
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஆவார் என்றும் கிஷண் ரெட்டி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்