ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

தேர்தலில் கேட்ட சின்னம் ஒதுக்காததால், ஆவடி தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்க கோரி எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
x
தேர்தலில் கேட்ட சின்னம் ஒதுக்காததால், ஆவடி தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்க கோரி எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணிகள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், தேர்தல் நடைமுறையில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்