திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
x
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திமுகவினர் வாக்களர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாத்திரங்களை வழங்கியதாக சுயேட்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் மனுதாக்கல் செய்தார். அதில் தி.மு.க. வேட்பாளர் தங்கம் தென்னரசுவை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும்  மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இந்த புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்