தபால் வாக்கு:குறுகிய இடத்தில் அதிக பேர் குவிந்தனர் - வாக்களிக்க வந்தவர்கள் கடும் சிரமம்

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் தபால் வாக்கு செலுத்த அலுவலர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தபால் வாக்கு:குறுகிய இடத்தில் அதிக பேர் குவிந்தனர் - வாக்களிக்க வந்தவர்கள் கடும் சிரமம்
x
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மொத்தம் 15 ஆயிரத்து 144 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் தபால் வாக்கு செலுத்த திருச்சி கருமண்டபத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் இடம் குறுகலாக இருந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாக்களிக்க வந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்..


Next Story

மேலும் செய்திகள்