"முதல்வர் நட்ட அடிக்கலில் கட்டடமே கட்டலாம்" - ஆலங்குடியில் ப.சிதம்பரம் பிரசாரம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டிய செங்கல்களை வைத்து ஒரு பெரிய கட்டிடமே கட்டி இருக்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதனை ஆதரித்து ஆலங்குடியில் பிரச்சாரம் செய்த அவர், கூவத்தூர் செல்லும் வரை பழனிச்சாமி என்றொரு அமைச்சர் இருப்பதே தமக்கு தெரியாது என்றார். ஆலங்குடி தொகுதியில், 60 நாட்களுக்கு முன் மாற்றுக் கட்சியில் இருந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்து அதிமுகவினருக்கு, அக்கட்சி துரோகம் செய்துவிட்டதாகவும் சாடினார்.
Next Story