ஒரே வாரத்தில் 9,856 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஒரே வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
x
மார்ச் 19ஆம் தேதி ஆயிரத்து 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மார்ச் 20ஆம் தேதி ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மார்ச் 21ஆம் தேதி ஆயிரத்து 289 பேருக்கும், மார்ச் 22ஆம் தேதி ஆயிரத்து 385 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மார்ச் 23ஆம் தேதி ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மார்ச் 24ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 636 ஆக உயர்ந்த நிலையில், மார்ச் 25ஆம் தேதி ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் 9 ஆயிரத்து 856 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்