தஞ்சை மாவட்டத்தில் மேலும் 7 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 7 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
x
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்த மாணவர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது. திருப்பனந்தாளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே போல, திருவையாறில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 4 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 11 பள்ளிகளை சேர்ந்த 180 மாணவர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர 4 கல்லூரிகளைச் சேர்ந்த 18 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது, 2 பள்ளிகளைச் சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்த மாணவர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்