பெண் எஸ்பி புகார்- சிபிசிஐடி விளக்கம்

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு எட்டு வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் உறுதி அளித்துள்ளனர்.
x
பெண் எஸ்பி, சிறப்பு டிஜிபி மீது அளித்த பாலியல் புகார் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில்,  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுவரை 87 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.சிசிடிவி காட்சிகளின் ஆய்வறிக்கைக்காக காத்திருப்பதாகவும்,இன்னும் எட்டு வார காலத்திற்குள் வழக்கு முடிக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, புலன் விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.  இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த அரசை நீதிபதி பாராட்டினார். ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்