மேலும் 5 மாணவர்களுக்கு கொரோனா - 3 கல்லூரிகளில் 18 பேருக்கு தொற்று உறுதி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கல்லூரி மாணவர்கள் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
x
தஞ்சாவூரில் பள்ளிகளை தொடர்ந்து, கல்லூரிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தற்போது கும்பகோணம் அன்னை கல்லூரியை சேர்ந்த மேலும் புதிதாக 5 மாணவர்களுக்கு கொரோனா  தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்களின் 13ல் இருந்து 18ஆக உயர்ந்துள்ளது. தஞ்சாவூரில் ஏற்கனவே 11 பள்ளிகளில் 180 மாணவர்களுக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 75 மாணவர்கள் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்