தபால் வாக்கு அங்கீகாரம் வழங்கும் பணி குளறுபடி என அப்பாவு குற்றச்சாட்டு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தேர்தல் பணியாளர்களுக்கு தபால் வாக்கு அங்கீகாரம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக திமுக வேட்பாளர் அப்பாவு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
தபால் வாக்கு அங்கீகாரம் வழங்கும் பணி குளறுபடி என அப்பாவு குற்றச்சாட்டு
x
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தேர்தல் பணியாளர்களுக்கு தபால் வாக்கு அங்கீகாரம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக திமுக வேட்பாளர் அப்பாவு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராதாபுரம் தொகுதியில் தேர்தல் பணிக்காக சுமார் 2000 பேர்  நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதாக கூறினார். அவர்களில் பாதி பேருக்கு மட்டும்தான்  தபால் வாக்கு அளிப்பதற்கான விண்ணப்பம்-12-டி, ஐ பூர்த்தி செய்து அதனுடன் பணி ஆணை கொடுத்துள்ளதாக அப்பாவு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்