தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை..இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?

தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை..இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?
x
தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். 

தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில், பதற்றம் நிறைந்த வாக்குச்சவடிகள் மற்றும்  பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும்  பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழு மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இது வரை 208 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், பரிசுப் பொருட்கள், மது பாட்டில்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றில் 76 கோடியே 27 லட்ச ரூபாய் பணம் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதைபோல், ஒரு கோடியே 4 லட்ச ரூபாய் மதிப்பிலான 94 ஆயிரத்து 842 லிட்டர் மது பாட்டில்களும் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்