அண்ணா பல்கலை., எம்.டெக். படிப்பு விவகாரம் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

அண்ணா பல்கலைக் கழகத்தில் இரு எம்.டெக் படிப்புகளில் 49.5 சதவிகித இட ஒதுக்கீடு முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அண்ணா பல்கலை., எம்.டெக். படிப்பு விவகாரம் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
x
அண்ணா பல்கலைக் கழகத்தில் இரு எம்.டெக் படிப்புகளில் 49.5 சதவிகித இட ஒதுக்கீடு முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு எம்.டெக். படிப்புகளுக்கான சேர்க்கையில் மத்திய அரசின் முறைப்படி 49.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்தினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.

இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, 49.5 சதவிகித இட ஒதுக்கீட்டை மட்டும் பின்பற்றினால் போதுமானது என்றார். அதோடு, 10 சதவிகித இட ஒதுக்கீட்டை மாநில அரசு ஏற்கவில்லை என மத்திய அரசுக்கு தெரிவிக்குமாறும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்தினார். 

பத்து சதவீத ஒதுக்கீட்டு மாணவர்கள் இல்லாமல் புதிய பட்டியலை வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு அண்ணா பல்கலைகழகம் கோரியதை நிராகரித்த நீதிமன்றம், 

49.5 சதவிகித ஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், புதிய உத்தரவை பிறப்பிக்க முடியாது முடித்து வைத்தார். 



Next Story

மேலும் செய்திகள்