கொரோனா விதிமுறைகள் மீறல் - ரூ.3.66 கோடி அபராதம் வசூல்

கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்களிடம் இருந்து, கடந்த 10ஆம் தேதி வரை 3 கோடியே 66 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா விதிமுறைகள் மீறல் - ரூ.3.66 கோடி அபராதம் வசூல்
x
கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்களிடம் இருந்து,  கடந்த 10ஆம் தேதி வரை 3 கோடியே 66 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்