தீக்குளிக்க முயன்ற 92 வயது மூதாட்டி - நிலத்தை அபகரித்த‌தாக திமுக பிரமுகர் மீது புகார்

தன் நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமித்து கொண்டதாக மூதாட்டி உறவினர்களுடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயன்ற 92 வயது மூதாட்டி - நிலத்தை அபகரித்த‌தாக திமுக பிரமுகர் மீது புகார்
x
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா ஏ.கிளியனூர் கிராமத்தை சேர்ந்த 92 வயது மூதாட்டி திருபுரசுந்தரி. அதே கிராமத்தில் உள்ள இவரது 11 சென்ட் நிலத்தை திமுக கிளைச்செயலாளர் வைத்தியநாதன் முள்வேலி அமைத்து ஆக்கிரமித்துகொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து பாலையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத‌தால், ஸ்ரீகண்டபுரம் கடைவீதியில் மூதாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளர் ஜெயா பேச்சுவார்த்தை நடத்திய போது, திடீரென மூதாட்டியின் உறவினர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

 


Next Story

மேலும் செய்திகள்