யானையை பாகன்கள் துன்புறுத்திய விவகாரம் - கோயில் திரும்பிய யானை ஜெயமால்யதா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இருந்து மீண்டும் கோயிலுக்கு திரும்பியது.
யானையை பாகன்கள் துன்புறுத்திய விவகாரம் - கோயில் திரும்பிய யானை ஜெயமால்யதா
x
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இருந்து மீண்டும் கோயிலுக்கு திரும்பியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை ஜெயமால்யதாவை பாகன்கள் அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வை தொடர்ந்து,  பாகன்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் இருவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். முன்னதாக யானை ஜெயமால்யதாவை திருச்செந்தூர் முருகன் கோயில் யானையின் உதவி பாகன் சுப்பிரமணியம் பராமரித்து வந்தார். இந்நிலையில், அவரின் அரவணைப்பில் தற்போது யானை முகாமில் இருந்து கோயில் கொண்டு வரப்பட்டது. அங்கு யானைக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்து கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்