குளிரில்நடுங்கிய நாய்க்குட்டிக்கு அடைக்கலம் - பிள்ளைபோல நாயை நேசித்து வளர்க்கும் குரங்கு

குளிரில் நடுங்கிய நாய்க்குட்டிக்கு அன்பால் அடைக்கலம் கொடுத்து தாயுமானவனாக மாறியிருக்கிறது ஒரு குரங்கு.
குளிரில்நடுங்கிய நாய்க்குட்டிக்கு அடைக்கலம் - பிள்ளைபோல நாயை நேசித்து வளர்க்கும் குரங்கு
x
குளிரில் நடுங்கிய நாய்க்குட்டிக்கு அன்பால் அடைக்கலம் கொடுத்து தாயுமானவனாக மாறியிருக்கிறது ஒரு குரங்கு... கடலூர் மாவட்டத்தில் சுற்றி வரும் இந்த குரங்கின் பாசப் போராட்டம் குறித்த செய்தித் தொகுப்பை இப்போது  பார்க்கலாம்...

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி கிராமத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது இந்த ஜீவன்கள்...

தாயை இழந்துவிட்டு கொட்டும் பனியால் தவித்து வந்தது கண்கள் கூட திறக்காத நிலையில் இருந்த நாய்க்குட்டி ஒன்று... யாரும் இந்த நாய்க்குட்டியை கண்டுகொள்ளாத போது, அந்த வழியாக வந்த குரங்கின் கண்ணில் தென்பட்டது. 

ஆண் குரங்காக இருந்த போதிலும் அந்த நாய்க்குட்டியை அரவணைத்து தூக்கிய அந்த குரங்கு, அதை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருகிறது. தாய் குரங்காக இருந்தால் கூட பால் கொடுத்து பராமரிக்கலாம். ஆனால் ஆண் குரங்குக்கு அதுவும் சாத்தியமில்லை. ஆனாலும் கூட, அந்த குரங்கின் கவனம் எல்லாம் நாய்க்குட்டியை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலேயே இருக்கிறது...

Next Story

மேலும் செய்திகள்