வேட்பாளர் நேர்காணல் - தேமுதிக அறிவிப்பு

வரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது.
வேட்பாளர் நேர்காணல் - தேமுதிக அறிவிப்பு
x
வரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் நாளான 6ஆம் தேதி காலை 10.35 மணிக்கு கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி,  நெல்லை, இராமநாதபுரம் தேனி ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. அதே நாள் மதியம் 02.00 மணிக்கு கரூர்,  புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை,  மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. இரண்டாம் நாளான 7ஆம் தேதி காலை 9 மணிக்கு, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கும், மதியம் 2 மணிக்கு தஞ்சை, சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. மூன்றாம் மற்றும் கடைசி நாளான 8ஆம் தேதி,   காலை 9 மணிக்கு மதுரை, திண்டுக்கல், தருமபுரி,  அரியலூர், பெரம்பலூர், விழுப்புரத்திற்கும், மதியம் 2 மணிக்கு திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது. மேற்கண்ட மாவட்டங்களில் விருப்ப மனு வழங்கிய நூற்றுக்கணக்கானவர்களிடம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் முன்னிலையில் நேர்காணல் நடைபெற உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்