"வங்கக் கடலில் எதிர் சுழற்சி நிலவுகிறது"- சென்னை வானிலை ஆய்வும் மையம் தகவல்
தமிழகம், புதுவையில் இன்று முதல் மார்ச் 5ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் நிலவும் எதிர் சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு 22 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story