ராஜேஷ்தாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு

பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த புகாரின் பேரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் எஸ்.பி. கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராஜேஷ்தாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு
x
பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த புகாரின் பேரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் எஸ்.பி.  கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டது.  புகார் அளிக்க சென்னை சென்ற  அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை வழியிலேயே மடக்கி மிரட்டியதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து  பெண் ஐபிஎஸ் அதிகாரி , ராஜேஷ்தாஸ் மற்றும் கண்ணன் மீது  டிஜிபி, உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தார். அதனை சிபிசிஐடி போலீசார் விசாரிக்குமாறு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ராஜேஷ் தாஸ் மற்றும் கண்ணன் ஆகிய இருவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும்  சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்