பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆலோசனை - ஏப்.15க்குள் பாடங்களை முடிக்க அறிவுறுத்தல்

பொது தேர்வை சந்திக்க உள்ள மாணவர்களுக்கான பாட திட்டங்களை ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை செயலாளர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆலோசனை - ஏப்.15க்குள் பாடங்களை முடிக்க அறிவுறுத்தல்
x
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் காணொலி வாயிலாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. 38 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் காணொலி மூலம், கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பொதுத்தேர்வை சந்திக்க மாணவர்கள் தயாராக உள்ளார்களா,  பாடதிட்டம் முடிக்கப்படடுள்ளதா என செயலாளர்கள் கேட்டறிந்தார். பின்னர், ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வை சந்திக்கும் அனைத்து மாணவர்களுக்குமான பாடத்தை, முடிக்க வேண்டும் என்றும் , அவர் உத்தரவிட்டதாக, முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர். சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிவடைந்த பிறகு 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Next Story

மேலும் செய்திகள்