தர்மபுரியில் கார் மோதி 3 பேர் உயிரிழப்பு.... 4 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பேருந்துக்காக சாலையில் காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிந்தனர்.
தர்மபுரியில் கார் மோதி 3 பேர் உயிரிழப்பு.... 4 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு
x
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பேருந்துக்காக சாலையில் காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிந்தனர்.அரூர் எஸ்.பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பேருந்துக்காக சாலையோரத்தில் காத்திருந்து உள்ளனர். அப்போது ஊத்தங்கரை நோக்கி மிகவேகமாக சென்ற கார் அவர்கள் மீது மோதியது. இதில், கிராமத்தை சேர்ந்த வெண்மனி, சிவலட்சுமி மற்றும் 14 வயது சிறுவன் ஸ்ரீநாத் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த மேலும் இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை அடுத்து அப்பகுதியில் கூடிய 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் 4 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து நேரிட்ட போது  தகவல் தெரிவித்து 2 மணி நேரம் கழித்துதான் ஆம்புலன்ஸ் வந்தது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்