"கிரண்பேடி, தமிழிசையால் காங்கிரஸ் வீழாது" - கே.எஸ். அழகிரி

எத்தனை துணை நிலை ஆளுநர்களை அனுப்பினாலும், காங்கிரஸ் கட்சி வீழாது என அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
கிரண்பேடி, தமிழிசையால் காங்கிரஸ் வீழாது - கே.எஸ். அழகிரி
x
எத்தனை துணை நிலை ஆளுநர்களை அனுப்பினாலும், காங்கிரஸ் கட்சி வீழாது என அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி சுற்றுப்பயணம் தொடர்பாக, தூத்துக்குடி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த கே.எஸ். அழகிரி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மக்கள் தேர்ந்தெடுத்த அரசை செயல்படவிடாமல் பிரதமர் மோடி தடுத்ததாகவும், முன்னர் கிரண்பேடி, தற்போது தமிழிசை என ஆளை மாற்றியுள்ளதாகவும் சாடினார். எத்தனை பேர் வந்தாலும், மகாபாரதத்தில் வீழ்ந்தது போல், எதிரிகளை வீழ்வார்கள் என்றும், மக்களின் துணையோடு நாராயணசாமி ஆட்சி தொடரும் என்றும் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்