குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏசி வசதியை பயன்படுத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
x
முழு ஊரடங்கின் போது நிறுத்தப்பட்ட ஏசி பேருந்து வசதியை மீண்டும் அனுமதிக்குமாறு அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்து வந்த தமிழக அரசு, அனைத்து இடங்களிலும் ஏசி வசதியுடன் வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. பணப்பரிவர்த்தனையை தவிர்த்து ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏசி வெப்பநிலை 24 முதல் 30 டிகிரி செல்சியஸ்க்குள் இருக்க வேண்டும் எனவும், தூய்மையான காற்று அளவு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பேருந்து ஊழியர்கள், பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் காய்ச்சல் இருந்தால் அனுமதிக்ககூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்