"போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகள் - முதல்வருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும்" அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி

போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு முதலமைச்சருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகள் - முதல்வருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி
x
போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு முதலமைச்சருடன்  கலந்து பேசி தீர்வு காணப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பல கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்தன. இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் உறுதி அளித்த நிலையில், வரும் 23-ஆம் தேதிக்குள் உரிய முடிவை தெரிவிக்கவில்லை எனில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

Next Story

மேலும் செய்திகள்