தேமுதிகவில் பிப்.25 முதல் விருப்ப மனு - "மார்ச் 5 ஆம் வரை விருப்ப மனுக்களை பெறலாம்" - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல்  மார்ச் 5 ஆம் தேதி வரை  விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் என்றும், தனி தொகுதிக்கான விருப்ப மனு கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான கட்டணமாக 10 ஆயிரம் ரூபாயும், தனி தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக 5 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,.

Next Story

மேலும் செய்திகள்