வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மோசடி - மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய கும்பல்

சென்னையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, மூதாட்டியிடம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மோசடி - மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய கும்பல்
x
தாம்பரம் சானடோரியம், ஜட்ஜ் காலனியை சேர்ந்த மூதாட்டி சியாமளா. சியாமளாவின் செல்போனுக்கு, இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அழைப்பு ஒன்று வந்துள்ளது. பின்னர், பேசிய நபர் மூத்த குடிமக்கள் வங்கிக்கு வராமல் இருக்கும் விதமாக, வங்கி நிர்வாகம் அனைத்து பணிகளையும் ஆன்லைன் மூலமாகவே, மேற்கொள்ளை வசதி ஏற்படுத்தி உள்ளதாக கூறி, சியாமளாவின் வங்கி தகவல்களை அனைத்தையும் வாங்கி உள்ளார். பின்னர், தனது செல்போன் எண்ணுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் சியாமளா பகிர, மோசடி கும்பல் 9 தவணையாக 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் சுருட்டி உள்ளனர். பின்னர், மூதாட்டி அளித்த புகாரின் பேரில், சிட்லபாக்கம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்