54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ப்பட்டுள்ளனர்.
54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
x
அதன்படி, ஒரே நேரத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக காவல்துறை மேற்கு மண்டல ஐ.ஜிஆக தினகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி ஐ.ஜி சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி நகர காவல் ஆணையராக அன்பும், சேலம் நகர காவல் ஆணையராக சந்தோஷ்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,யாக மணிவண்ணன் நியமிக்கபட்டுள்ளதாகவும், காவல்துறை பொதுப்பிரிவு ஐ.ஜி.,யாக பெரியய்யா நியமிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக பவானீஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்