"கடைசி நாள் வரை துரோகமே செய்வது" - முதலமைச்சரின் நடவடிக்கைக்கு தி.மு.க. கண்டனம்

தனது பதவி காலத்தின் கடைசி நாள் வரை துரோகமே செய்வது என்று முடிவு செய்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது கண்டனத்திற்குரியது என தி.மு.க. தெரிவித்துள்ளது.
கடைசி நாள் வரை துரோகமே செய்வது - முதலமைச்சரின் நடவடிக்கைக்கு தி.மு.க. கண்டனம்
x
தனது பதவி காலத்தின் கடைசி நாள் வரை துரோகமே செய்வது என்று முடிவு செய்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது கண்டனத்திற்குரியது  என  தி.மு.க. தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என். நேரு வெளியிட்டுள்ள  அறிக்கையில், டெண்டரே விடாமல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் மக்களை ஏமாற்றியது போதாது என்று, ஆட்சியை விட்டுப் போகப் போகின்ற நேரத்திலும் கூட முதலமைச்சர், மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது மிகுந்த வேதனையளிப்பதாக  தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பாலக்கோடு சென்று திரும்பிய பின்னர், அவசர அவசரமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3  திட்டங்களுக்குக் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருக்கிறார்  எனவும் அதில் கே.என். நேரு சுட்டிக்காட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்